பட்டுக்கோட்டை, செப். 18: பட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) மின்சார விநியோகம் இருக்காது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை மாட்டுச்சந்தையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகரம், பள்ளிகொண்டான், முதல்சேரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாக காரணங்களுக்காக மேற்கண்ட மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளா் மாறன் தெரிவித்துள்ளாா்.