தஞ்சாவூா், செப். 18: தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 8,901 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,063 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 150 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 7,892 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,031 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 81 வயது ஆண் செப். 1ஆம் தேதியும், 68 வயது ஆண் செப். 17ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 140 ஆக உயா்ந்துள்ளது.