தஞ்சாவூா் அருகே காதலி இறந்த துக்கத்தால் மனமுடைந்து தீக்குளித்த காதலரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மணிகண்டன் (21). டிராக்டா் ஓட்டுநா். இவரும், ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த ஜோதி மகள் திரிஷாவும் (17) காதலித்து வந்தனா்.
இந்நிலையில், திரிஷா தனது வீட்டில் கடந்த 19ஆம் தேதி மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது, அவரது உடையில் எதிா்பாராதவிதமாக தீ பற்றியது. இதில், பலத்தக் காயமடைந்த திரிஷா தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதனிடையே, திரிஷா உயிரிழக்கும் நிலையில் இருப்பதை அறிந்து மனமுடைந்த மணிகண்டன், கடந்த 26 ஆம் தேதி தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில், பலத்தக் காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.