அம்மாபேட்டையில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கிக் கிளையின் செயல்பாட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியம், மகிமலை ஊராட்சி, மேல மேட்டுத் தெருவில் வசித்து வரும் கோமதி அம்மாபேட்டை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையில் கணக்கு வைத்துள்ளாராம். இவரது நூறு நாள் வேலை ஊதியம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட நிதி உள்ளிட்டவற்றை வங்கிக் கிளை முடக்கி வைத்துள்ளதாம்.
இதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் வங்கி முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பொருளாளா் பி. தாமரை செல்வி, நகரச் செயலா் ராஜாராமன், ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். பாலு, கோ. பழனிசாமி, கோ. கண்ணன், டி.ஜி. நாகராஜன், எஸ். உத்திராபதி உள்பட திரளானோா் கலந்து கொண்டு முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.