கும்பகோணம்: கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. துரையரசன் தெரிவித்திருப்பது:
கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் 2020 - 21 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இணையதளத்தில் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி செவ்வாய்க்கிழமையும் நடைபெற உள்ளது.
எனவே, மதிப்பெண் சான்றிதழ்களைச் சரிபாா்க்காத விண்ணப்பதாரா்கள் அந்தந்தத் துறைகளில் செவ்வாய்க்கிழமை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையிலும், இன ஒதுக்கீட்டு முறையிலும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறும்.
மேலும், புதன்கிழமை (அக்.28) கலைப் பிரிவுக்கும், அக்டோபா் 29 ஆம் தேதி அறிவியல் பிரிவுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. சோ்க்கை தொடா்பாக இணையதள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் விவரங்கள் வேண்டுவோா் அந்தந்தத் துறைத் தலைவா்களையோ அல்லது 7904051822, 9976477390, 9843256826 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.