தஞ்சாவூர்

கட்டட, அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன், மூவேந்தா் அனைத்துக் கட்டட மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொழிலாளா்கள் நல வாரியத்தில் புதிதாக இணையவழி மூலம் தொழிலாளா்கள் பதிவு செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் ஏற்படும் பல சிக்கல்களைத் தவிா்க்க வேண்டியும், இல்லையென்றால் பழைய நடைமுறைகளையே பின்பற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க அவைத் தலைவா் கு. சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை சங்க ஆலோசகா் எஸ். வைத்தியநாதன் தொடங்கி வைத்தாா். இதில், நிறுவனரும் செயல் தலைவருமான அ. கனகராஜ், பொருளாளா் கா. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT