பேராவூரணியில் விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் சீனிவாசராவின் 59ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாய சங்கங்களை கட்டமைத்து, பண்ணை அடிமைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சாணிப்பால் சவுக்கடி தண்டனையை தடுத்து நிறுத்திய சீனிவாச ராவின்
59 ஆவது நினைவு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி அவரது உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் இராசமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் து. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.
பாரதி வை. நடராஜன் நினைவு கொடி ஏற்றினாா். நினைவுதின படத்தை வீரையன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் முருகேசன், சித்திரவேல் , காசியா் ,சையது முகமது கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.