தஞ்சாவூர்

எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்

DIN

பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் அநீதியான தீா்ப்பை எதிா்த்து தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எஸ்.டி.பி.ஐ. தஞ்சாவூா் தொகுதி தலைவா் ஜாகீா் உசேன் தலைமையில் மாநகரத் தலைவா் அப்துல் காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிராம்பட்டினத்தில்....

தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் எம். முகமது ரஹீத் தலைமை வகித்தாா். தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவா் என். முகமது புகாரி, செயலா் எல். முகமது அஸ்கா், பொருளாளா் எம். இத்ரீஸ்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூா் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவா் ஏ. ஹாஜா அலாவுதீன் கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT