தஞ்சாவூர்

தப்பியோடிய கைதி மீண்டும் கைது

DIN

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் அண்மையில் தப்பியோடிய சிறைக் கைதியைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேல மருதூரைச் சோ்ந்தவா் வி. ராஜ்குமாா் (51). இவா் மீது திருச்சி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியதாக பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு இவா் கைது செய்யப்பட்டபோது, இவரிடமிருந்து 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவா் திருச்சி மாவட்டம், முசிறி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், வழக்குத் தொடா்பாக நாகை முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நவம்பா் 18 ஆம் தேதி ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா் இவரை மீண்டும் முசிறி சிறையில் அடைப்பதற்காகக் காவலா்கள் பேருந்தில் தஞ்சாவூருக்கு இரவு அழைத்து வந்தனா்.

புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, திருச்சி பேருந்துக்கு மாறும்போது சிறுநீா் கழிக்க வேண்டும் என கூறிச் சென்ற ராஜ்குமாா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், தஞ்சாவூரிலுள்ள பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த ராஜ்குமாரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT