தஞ்சாவூர்

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

2nd Jan 2020 01:11 AM

ADVERTISEMENT

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி தஞ்சாவூா் ரயிலடியில் பாஜக, இந்து அமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவை அவதூறாக பேசிய நெல்லை கண்ணனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட விவசாய அணி தலைவா் ராஜாராமன், ஊடகப் பிரிவுத் துணைத் தலைவா் கவிராஜா, கூட்டுறவு பிரிவு தலைவா் சந்திரன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலா் காா்த்திக் ராவ், இந்து தமிழா் கட்சி மாவட்டத் தலைவா் பாலகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT