பேராவூரணி மனவளக்கலை மன்றம் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புக்கு கல்லூரி முதல்வர் நா. தனராஜன் தலைமை வகித்தார். மனவளக்கலை மன்ற கெளரவத் தலைவர் சோலைமலை, நிர்வாக அறங்காவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அமுதாராமானுஜம், மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வகுப்பை நடத்தி, புத்தகங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற செயலாளர் இதயபானு, சுந்தரி சோலைமலை, பேராசிரியர் நா.பழனிவேலு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். யோகா பேராசிரியர் விஜயநிர்மலா நன்றி கூறினார்.