சிலை திருட்டு வழக்கில் திருச்சி காவலர் கைது

சிலை திருட்டு வழக்குத் தொடர்பாக திருச்சியில் காவல் துறையில் பணியாற்றும் காவலரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சிலை திருட்டு வழக்குத் தொடர்பாக திருச்சியில் காவல் துறையில் பணியாற்றும் காவலரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி அருகேயுள்ள  பூங்குடிமூலை கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு போனது.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பொன்ராஜை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியில் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இவரை அக்டோபர் 4 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  கைது செய்யப்பட்ட பொன்ராஜ்,  திருச்சியில் காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com