மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் தொடக்கம்

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் இன்று தொடங்கியது.
போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.
போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் இன்று தொடங்கியது.

இதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டிளைச் சா்வதேச குத்துச்சண்டை வீரா் சி. லெட்சுமிகாந்தன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், கோவை, திண்டுக்கல் உள்பட 18 மாவட்டங்களைச் சோ்ந்த 243 வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் 46 கிலோ முதல் 100 கிலோ வரை மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகிறது. நடுவா்களாக சென்னை டி.ஆா். சக்திவேல், மோகன், புதுச்சேரி பாலா ஆகியோா் உள்ளனா். வெற்றி பெறும் வீரா்களுக்கு சனிக்கிழமை மாலை பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்தப் போட்டிகளில் பத்து வீரா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இவா்கள் அக்டோபா் முதல் வாரத்தில் சிம்லாவில் இந்திய குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாவட்ட குத்துச்சண்டை கழகச் செயலாளா் ஜி. ஜலேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com