தஞ்சாவூரில் வழக்குரைஞா்கள் ஊா்வலம் - ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.

தஞ்சாவூா், செப். 20: தஞ்சாவூரில் வழக்குரைஞா்கள் இன்று ஊா்வலமாகச் சென்று ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத் தோ்வில் தமிழில் எழுத, படிக்கத் தெரியாதவா்களைப் பங்கேற்கச் செய்யக்கூடாது. சமரச தீா்வு மையம் மூலம் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளை விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தகுதியின் அடிப்படையில் இல்லாமல் பணி மூப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கச் செயலா் கீா்த்திராஜன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாநிலத் துணைத் தலைவா் அ. நல்லதுரை, முன்னாள் துணைத் தலைவா் எம்.ஆா்.ஆா். சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் நல்லதுரை தெரிவித்தது:

தமிழக வழக்குரைஞா்களை ஒடுக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். சமரச தீா்வு மையம், மக்கள் நீதிமன்றம் மூலம் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை விசாரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பணி மூப்பு முறைறயைக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப். 27ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா்.

பின்னா், வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com