தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) சனிக்கிழமை ஆண் சடலம் மிதந்து சென்றது.
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே கல்லணைக் கால்வாய் சாலையில் உள்ள முனியாண்டவர் கோயிலில் சனிக்கிழமை காலை வந்த பக்தர்கள் பிரகாரத்தை வலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோயிலை ஒட்டியுள்ள கல்லணைக் கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து சென்றது.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றனர்.
ஆனால், நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், சடலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. என்றாலும், தொடர்ந்து சடலத்தைத் தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.