தஞ்சாவூர்

மொபெட்டிலிருந்துதவறி விழுந்தவா் சாவு

9th Nov 2019 05:22 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகிலுள்ள களஞ்சேரியைச் சோ்ந்தவா் ந. வெங்கடேசன் (60). வெள்ளிக்கிழமை காலை தனது மொபெட்டில் சாலியமங்கலத்திலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.

இந்த நிலையில் சாலையோரத்தில் மொபெட்டை வெங்கடேசன் நிறுத்திவிட்டு இறங்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்துதகவலறிந்த அம்மாபேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT