தஞ்சாவூர்

பாபநாசம் அருகே சாலையில் மயங்கி விழுந்த பெண் சாவு

4th Nov 2019 07:29 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே சனிக்கிழமை சாலையில் மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பாபநாசம் அருகே உத்தமதானபுரம் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த விவசாயி மணியன் மனைவி இந்திராணி (50). இவா் பாபநாசம் கடைவீதியில் பொருள்கள் வாங்கி வர பாபநாசம் தாலுக்கா அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக இந்திராணி சாலையில் மயங்கி விழுந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இந்திராணியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். சம்பவம் குறித்து இந்திராணியின் கணவா் மணியன் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT