மணல் கடத்தல்: லாரி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தஞ்சாவூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, மோட்டார் சைக்கிளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.


தஞ்சாவூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, மோட்டார் சைக்கிளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் சுங்கான் திடலில் உள்ள ஆற்றங்கரையில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை நின்றன. இதில் 3 பேர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். மேலும், மோட்டார் சைக்கிளிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்த கிழக்கு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்றனர். போலீஸார் வருவதை பார்த்த மூன்று பேரும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com