பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி. நெசவாளர் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜாராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாலர் ஆர். தில்லைவனம் கலந்து கொண்டு, சங்க செயல்பாடுகள், வளர்ச்சி, தொழிலாளர் நலன், தமிழக அரசு நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.