தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை, தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வசந்தம் லயன்ஸ் சங்கம், பான்செக்கர்ஸ் கல்லூரி, ஐயா புட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்த இக்கருத்தரங்கை நடத்தின.
லயன்ஸ் சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.லயன்ஸ் சங்கத்தின் அமல் ஸ்டாலின், ஐயா புட்ஸ் நிறுவனர் பீட்டர்பாபு நோக்கவுரையாற்றினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்.கார்த்திகேயன், தஞ்சாவூர் சரகப் போக்குவரத்து ஆணையர்
செ. உதயகுமார் சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் கேத்தலினா வாழ்த்துரை வழங்கினார்.
கோவை மாவட்ட முன்னாள் முதன்மை போக்குவரத்து வார்டன் பொள்ளாச்சி பிரின்ஸ், அரிமா சங்க நிர்வாகி கமலக்கண்னன் வினாடி வினா மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். சாலைப் பாதுகாப்புத்தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வை கல்லூரித் தமிழ்த்துறை துணைப் பேராசிரியை
சண்முகபிரியா தொகுத்தளித்தார். முன்னதாக துணைப் பேராசிரியை முத்தழகி வரவேற்றார். நிறைவில் பேராசிரியை அனுராதா நன்றி கூறினார்.