பட்டுக்கோட்டையில் அரசுக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக் கிளைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: பட்டுக்கோட்டையில் அரசுக் கலைக் கல்லூரித் தொடங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.  சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படும் வகையில், இக்கல்லூரியைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் ராமேசுவரத்துக்கு விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.சிவசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலர் டி.மோகன்தாஸ், இணைச்செயலர் கே.பொன்முடி, டி.ஜோதி, கே.முனுசாமி  உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  நிறைவில் கே.மணவாளன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com