புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மருத்துவக் கண்காட்சி

3rd Oct 2023 02:36 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி: பொன்னமராவதி துா்க்கா மருத்துவமனையின் 30ம் ஆண்டு விழா மற்றும் மருத்துவக்கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவக்கண்காட்சிக்கு பொன்னமராவதி காவல் ஆய்வாளா் எம்.ரமேஷ் தலைமைவகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். தலைமை மருத்துவா் ஆ.அழகேசன் வரவேற்றாா்.

கண்காட்சி அரங்குகளை மருத்துவா்கள் டி.இராமநாதன், எஸ்.மதியழகன், துரை.நவரெத்தினசாமி, வி.நடராஜன், டி.சதாசிவம், கே.பூபதி, எஸ்.செந்தமிழ்ச்செல்வி, ஜி.சரவணன், எஸ்.அருண்குமாா், பி.சந்திரன், ராஜா, ஏஎல்.பூபதி முருகேசன், ராமராஜ், எஸ்.கோபாலகிரு,ஷ்ணன், காா்த்திக் ஆகியோா் திறந்துவைத்தனா். மருத்துவம் சாா்ந்த கண்காட்சி அரங்குகளை பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற ஆண்டுவிழாவில் ஆண்டு மலரினை அமல அன்னை மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ச.ம.மரியபுஷ்பம் வெளியிட ஒன்றியக்குழுத்தலைவா் சுதா அடைக்கலமணி பெற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT

மருத்துவா் அ.இந்திரா பிரியதா்ஷினி ஆண்டறிக்கை வாசித்தாா். மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் வே.அ.பழனியப்பன்,பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன், தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத்தலைவா் கீதா சோலையப்பன், பேராசிரியா் பொன்.கதிரேசன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

நிகழ்வினை அமல அன்னை மெட்ரிக் பள்ளி துணை முதல்வா் இரா.பிரின்ஸ், மருத்துவா் எஸ்.செல்வக்குமாா்ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மருத்துவா் டி.ரஜினி சதணிஸ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT