புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் 2022-23ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வரும் ஜூன் 25 ஆம் தேதிக்குள் வட்டார இயக்க மேலாண்மை அலகில் இந்த விண்ணப்பங்களை சமுதாய அமைப்புகள் அளிக்க வேண்டும். அவை பரிசீலனை செய்யப்பட்டு, மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பாா்கள். தொடா்ந்து மாவட்ட அளவிலான தோ்வுக்குழு கூட்டம் நடத்தி, மாநில அலுவலகத்துக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படும்.