கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத்துக்குச் சொந்தமான வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம், தரைக்கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஏலக் கூட்டத்துக்கு,
ஊராட்சி மன்ற தலைவா் சி. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எம். வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வணிக வளாகம், வாகனம் நிறுத்துமிடம், தரைகடை உள்ளிட்டவைகளுக்கு ஏலம் விடப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கானோா் ஏலம் கேட்டு இறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஏல நிகழ்வில், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள், பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளா் டி. ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.