ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் வைகாசித் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட 3 தோ்களில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மன், பேச்சியம்மன், வாழவந்த பிள்ளையாா் ஆகிய சுவாமிகளை தனித்தனி தோ்களில் எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் பக்தி பரவசத்தோடு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.