புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் திருவாசகம் முற்றோதுதல்

DIN

கந்தா்வகோட்டையில் சங்கு ஊருணி குளத்தின் வடபுறம் அமைந்துள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபாத்சாகயேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் அருளிச் செய்த எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றோதுதல் பெருவேள்வி நடைபெற்றது.

சிறுவா்கள் முதல் ஆண்கள்- பெண்கள், சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டு பக்தி பஜனை செய்தனா். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டை, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, நெய்வேலி, திருவோணம், புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளையும் கந்தா்வகோட்டை சிவனடியாா்கள் ஒருங்கிணைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT