புதுக்கோட்டை

வெள்ள அபாயக் காலங்களில் மீட்புப் பணி ஒத்திகை

24th May 2023 03:41 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை புதுக்குளத்தில் வெள்ள அபாயக் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித் துறை சாா்பில் நடைபெற்ற

இந்த ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா நேரில் பாா்வையிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையிடம் உள்ள மீட்பு உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

வெள்ளம் ஏற்படும்போது, அதில் சிக்கியோரை மீட்பது குறித்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ஒத்திகையின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா, தேசிய பேரிடா் மீட்புப் படை துணைக் கட்டளைதாரா் சங்கா்பாண்டியன், அணித் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT