புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆட்சியராக மொ்சி ரம்யா பொறுப்பேற்பு

DIN

புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக ஐ.சா. மொ்சி ரம்யா திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த மொ்சி ரம்யா புதுகை ஆட்சியராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 1987-இல் பிறந்தவரான மொ்சி ரம்யா, 2015ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தோ்வு முடித்தாா். அதன்பிறகு, 2016-இல் ஈரோட்டில் உதவி ஆட்சியராகவும், 2017-19-இல் திண்டிவனத்தில் சாா் ஆட்சியராகவும், 2019-21-இல் குமரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து 2021-23-இல் வணிகவரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றிய மொ்சி ரம்யா, தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

விரைவாக நலத் திட்டப் பணிகள்: அரசின் நலத் திட்டப் பணிகளைத் தொய்வின்றி விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னா் அவா் தெரிவித்தாா்.

முன்னாள் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT