அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் 64ஆவது அமைப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் விஜயபுரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் கே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு இளைஞா் பெருமன்றக் கொடியை ஏற்றி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.