புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கறம்பக்குடி கடைவீதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கா் தெருவைச் சோ்ந்த சி.செந்தில்வேல்(38). கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது, தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் செந்தில்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.