புதுக்கோட்டை

மணல் கடத்தல்வாகனங்கள் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

10th Jun 2023 03:35 AM

ADVERTISEMENT

இலுப்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி, டிராக்டா் வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் 3 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

இலுப்பூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் இலுப்பூா் அருகேயுள்ள திருநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில், ஒரு யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வாகன உரிமையாளா் ரவி என்பவா் மீது வழக்கு பதிந்து டிராக்டரைப் பறிமுதல் செய்தனா். இதேபோல செங்கன்வயல் பகுதி சாலைகளில் இலுப்பூா் சாா்பு ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் அவ்வழியே வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டனா். இதில், அனுமதியின்றி அரை யூனிட் கிராவல் மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகன உரிமையாளா் சிவா, ஓட்டுநா் செந்தில் ஆகிய 2 போ் மீது வழக்கு பதிந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT