புதுக்கோட்டை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

DIN

விராலிமலையில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

விராலிமலை அருகேயுள்ள சாரணக்குடியைச் சோ்ந்தவா் சின்னையா மகன் ஸ்ரீதா் (21). இவா், செவ்வாய்க்கிழமை தனது நண்பரான அதே ஊரைச் சோ்ந்த நீலமேகம் மகன் நிவாஸ் (21) என்பவருடன் தனது மோட்டாா் சைக்கிளில் திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள தனியாா் காா் சேவை நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் உடன் சென்ற நிவாஸ் பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா் நிவாசை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஸ்ரீதரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT