புதுக்கோட்டை

தஞ்சை- புதுகை பேருந்துகள் புனல்குளத்தில் நின்று செல்ல கோரிக்கை

DIN

தஞ்சை-புதுகை பேருந்துகள் புனல்குளம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாா்க்கத்திலிருந்து தஞ்சை, கும்பகோணம் செல்லும் அனைத்து பேருந்துகளும் புனல்குளம், பழைய கந்தா்வகோட்டை, புதுநகா், காடவராயன்பட்டி, தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுநகா் பேருந்து நிறுத்தத்தில் தனியாா் மேல்நிலைப் பள்ளியும் , புனல்குளத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரியும், தஞ்சாவூரில் அரசு கலை அறிவியல் கல்லூரியும் மற்றும் தினசரி பணிக்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் சென்று வரும் சூழ்நிலையில் பேருந்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

எனவே, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் மேற்குறிப்பிட்ட இடங்களில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT