புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி, மண்டகபடிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மழைமாரியம்மனை எழுந்தருளச் செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் பக்தி பரவசத்தோடு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.