முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மரம் நண்பா்கள் சாா்பில், கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியை ஒட்டிய பகுதியில் சனிக்கிழமை காலை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில் மரம் நண்பா்களின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேரா. சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஆண்டு முழுவதும் மரக்கன்றுகள் நடவும் மரம் நண்பா்கள் அமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.