புதுக்கோட்டை

ஒடிசா ரயில் விபத்து: புதுகையில்மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

4th Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் பலியானோருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ராஜ சிவகுமாா் தலைமை வகித்தாா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ரயில் பயணிகள் சங்கச் செயலா் இப்ராஹிம்பாபு, சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சந்திரசேகரன், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், நகா்மன்ற உறுப்பினா் ராஜா முகமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். இதேபோல விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் தாளாளா் வெல்கம் மோகன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT