புதுக்கோட்டை

திருப்புனவாசலில் நாளை மனுக்கள் அளிக்கலாம்

4th Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த திருப்புனவாசல் கிராமத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரும் திங்கள்கிழமை பெறப்படவுள்ளன.

வரும் ஜூன் 14ஆம் தேதி இந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, முன்னதாக இங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் இந்த மனுக்கள் பெறப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT