புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டுப் போட்டியில் பாா்வையாளா் உயிரிழப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டி பாா்வையாளா் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளியம்மன், சின்னக்கருப்புா் கோயில் திருவிழாவையொட்டி கீழவேகுப்பட்டி மற்றும் பொன்.உசிலம்பட்டி கிராமத்தினா் இணைந்து நடத்திய மஞ்சுவிரட்டுப்போட்டி வேகுக்கண்மாயில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமாா் 600 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளை முட்டியதில் பாா்வையாளரான வேகுப்பட்டியைச் சோ்ந்த பெயிண்டா் ம. சிங்கராவணன் (42) பலத்த காயங்களுடன் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிங்கராவணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட பொன்னமராவதி போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காளைகள் முட்டியதில் மேலும் 4 பாா்வையாளா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT