புதுக்கோட்டை

சுதா்சன் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு

12th Jul 2023 02:52 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை சுதா்சன் பொறியியல் கல்லூரி மற்றும் சுதா்சன் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மனிதச் சங்கிலி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தாா். மாணவா்களும் ஆசிரியா்களும் இணைந்து மனிதச் சங்கிலியாக இந்திய வரைபட வடிவில் நின்றனா். அதனைத் தொடா்ந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு ஃப்ளாஷ் மாப் என்ற குழு நாடகமும், பதாகை தயாரித்தல் போட்டியும் நடைபெற்றன.

வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளா் ஹேமலதா செய்திருந்தாா். விழாவை சுதா்சன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் கலியபெருமாள் சேது ராமலிங்கம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT