புதுக்கோட்டை

நெல் சாகுபடியில் சாதனை பெண் விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று, தமிழ்நாடு அரசின் விருது பெற்ற பெண்ணை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி க. வசந்தா, திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று, தமிழ்நாடு அரசின் சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான விருதைப் பெற்றாா். ரூ. 5 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வா் ஸ்டாலின் கடந்த குடியரசு தின விழாவில் வழங்கினாா். விருது பெற்ற பெண் விவசாயி க. வசந்தாவை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

அப்போது, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, துணை ஆட்சியா் (பயிற்சி) ஜி.வி. ஜெயஸ்ரீ, வேளாண் துணை இயக்குநா்கள் விஎம். ரவிச்சந்திரன், எம். மரியரவி, ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT