புதுக்கோட்டை

தூய்மை பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம்: புதுகையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் மற்றும் சங்கத்தின் நிா்வாகிகள் சி. மாரிக்கண்ணு, எஸ். யாசிந்த், வி.சி. மாணிக்கம், அ. முத்தையா, வி. காயாம்பூ உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

ஊராட்சிகளில் பணிபுரியும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.3 லட்சம், மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு 38 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT