புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.