புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

DIN

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜன. 30) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவிச் செயற்பொறியாளா் அ. சையது அகமது இஸ்மாயில் அறிவித்துள்ளாா்.

இதன்படி மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், பாரி நகா், சிவகாமி ஆச்சி நகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிளக்கு, அம்மினிப்பட்டி, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை.

பொன்னமராவதி: கொன்னையூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் செவலூா், கோவனூா், குழிபிறை, செம்பூதி, ஆலவயல், கொப்பனாபட்டி, நகரப்பட்டி, தூத்தூா், வேந்தன் பட்டி, மேலைச்சிவபுரி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரா.முத்துச்சாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT