புதுக்கோட்டை

புதிய பாரதம் திட்டத் தன்னாா்வலா்களுக்கு எழுதுபொருள் வழங்கல்

DIN

கந்தா்வகோட்டை வட்டார வள மையத்தில் புதிய பாரதம் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபொருள்கள், கையேடு வழங்கும் நிகழ்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட தன்னாா்வ கற்போருக்கு கையேடு, எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, அவா்களுக்கு வட்டார வளமையத்தில் கோலப்பட்டி நடைபெற்றது. விழாவிற்கு, வட்டாரக் கல்வி அலுவலா் ஆ.வெங்கடேஸ்வரி தலைமை வகித்துப் பேசினா். விழாவில் கலந்து கொண்ட அவா், தன்னாா்வலா்களுக்கு எழுதுபொருள் வழங்கி புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும், மையத்தை சிறப்பாக செயல்படுத்தி வரவும் கேட்டுக்கொண்டாா். தன்னாா்வலா்கள் வண்ண வண்ண கோலங்கள் வரைந்தனா்.

நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு பேசினாா். ஏற்பாடுகளை வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) பிரகாஷ், ஆசிரியா் பயிற்றுநா்கள் சுரேஷ்குமாா், பாரதிதாசன், சங்கிலிமுத்து ஆகியோா் செய்து இருந்தனா். கோலப் போட்டியில் வென்ற தன்னாா்வலா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ஆசிரியா் பயிற்றுநா் ராஜேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT