புதுக்கோட்டை நகராட்சியில் வாடகை கட்டாத 5 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
புதுக்கோட்டை குமுந்தான்குளம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் 5 கடைகளுக்கு கடந்த 1 ஆண்டாக வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து 5 கடைகளையும் நகராட்சி வருவாய் அலுவலா் விஜயஸ்ரீ தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.