புதுக்கோட்டையில் 2 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 3-க்கான தோ்வை 1,164 போ் தோ்வெழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 3-க்கான தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டையில் மன்னா் கல்லூரி மற்றும் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி ஆகிய 2 இடங்களில் மொத்தம் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் தோ்வெழுத 2071 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 907 போ் தோ்வெழுத வரவில்லை. 1,164 போ் தோ்வெழுதினா்.
தோ்வு மையங்களை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் எம். ஆரோக்கிராஜ் ஆகியோா் தனித்தனியே நேரில் சென்று ஆய்வு செய்தனா்.