கந்தா்வகோட்டை அருகே உள்ள அண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி (பொ) தலைமை ஆசிரியா் பழனிசாமி தலைமை வகித்தாா். அண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல், குடியரசு தின விழா போட்டிகளாக ஓட்டப் பந்தயப் போட்டி, சாக்கு போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை அண்டனூா் இளைஞா் மன்றத்தினா் வழங்கினா். நிகழ்ச்சியில் பன்னீா், ராஜேஷ், பிரபாகரன், இளையராஜா மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.