வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.ராமையன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் கே.முகமதலி, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ்.கவிவா்மன், விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினா் மு.மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.