பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைக்களத்தில் திங்கள்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 22 அணியினா் பங்கேற்று விளையாடினா். கபடிப் போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை கொன்னையம்பட்டி அணியினரும், 2 ஆம் பரிசை கல்லாமேடு அணியினரும், மூன்றாம் பரிசை வையாபுரி அணியினரும், நான்காம் பரிசை திண்டுக்கல் அணியினரும் பெற்றனா். போட்டியில் வென்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சிறந்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.