புதுக்கோட்டை

அறந்தாங்கியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் குறிப்பிடப்படாததைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வட்டாரச் செயலா் தென்றல் கருப்பையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், மாவட்டக் குழு உறுப்பினா் தங்கராஜ், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கா்ணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவா் கவிபாலா, மாதா் சங்கத்தின் ஒன்றியச் செயலா் இந்திராணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT